தேசத்திற்கான ஜெபக்குறிப்புகள் 3 | Tamil Prayer Points For India

நேர்மையான தேர்தல்கள்

– வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. நமது நாடுகளில் தேர்தல்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்துள்ளன. வாக்கு இயந்திரங்களை உண்மைக்கு புறம்பாக மாற்றுவது தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. பல அதிகாரிகள் பிடிபட்டுள்ளனர் மற்றும் பெரும்பான்மையானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. வாக்களிக்காத குடிமக்களால் மோசமான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

குற்றக் கட்டுப்பாடு

– நம் நாட்டில் குற்றங்கள் நாம் நினைத்ததை விட அல்லது கற்பனை செய்ததை விட அதிகமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் குற்றங்களை பற்றி கேள்விப்படுகிறோம். சிலர் பிடித்து தண்டிக்கப்படுகிறார்கள். தண்டனை என்பது ஒருவரை பழிவாங்குவதற்காக அல்ல குற்றத்தை குறைத்து குற்றவாளியை சீர்திருத்துவதற்காக.

வறுமை ஒழிப்பு

– இன்று நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வறுமை. உலக வங்கியின் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கை 2022 இல் 145.71 மில்லியனாக (மக்கள் தொகையில் 10.2% ஆக) குறைந்துள்ளது. இந்தியாவில், வறுமைக் கோடு நகர்ப் புறங்களுக்கு ரூ1,286 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ 1,059.42 ஆகவும் உள்ளது.

ஜெபம் – வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கான வழிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெற வேண்டும்.

ஆராய்ச்சி வசதி

– ஆராய்ச்சி புதிய அறிவை உருவாக்குகிறது. ஆராய்ச்சி தொடர்ந்து அறிவுசார் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், மேலும் ஆராய்ச்சிக்கான நமது அர்ப்பணிப்பு இன்னும் அதிகமாக வளர வேண்டும். காரணம் நமது பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி இல்லாமல் நாம் முன்னேற முடியாது எனவே உற்பத்தி குறைவாக இருக்கும்.

குழந்தை உரிமைகளை அமல்படுத்துதல்

– நமது குழந்தைகள் தான் இந்த உலகின் எதிர்காலம். அவர்களிடமிருந்து நாம் எதைப் பெறுவது என்பது பற்றியது முக்கியம் அல்ல. நாம் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பது பற்றியது. அவர்களுக்காக நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அவர்களுக்கு அமையும். ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட உரிமை உண்டு. குழந்தை உரிமைகள் சரியாக கையாளப்பட வேண்டும்.

தேவ இராஜ்யத்தின் கொள்கைகள் கொண்ட சபைகள்

. – உலகத்துடன் சேர்ந்து நகரும் சபை அல்ல உலகையே நகர்த்தும் சபை தான் தேசத்துக்கு தேவை. சபை தன் தரிசனத்தை இழந்து உலகமே சபைக்குள் புகுந்துவிட்ட பரிதாபம் இன்று . இந்தியா ஒரு பெரிய எழுப்புதலை காண தேவனை மையமாகக் கொண்ட தேவா இராஜ்ஜிய கொள்கை கொண்ட , வார்த்தை அடிப்படையில் தேவாலயங்கள் இன்று தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *