ஆசீர்வதிப்பேன்‌ |ஆசீர்வாத வசனங்கள்| Aaseervathippaen Promise Verse Tamil |Vaakuthatha Vasanam

“நான்‌ உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்‌ சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்‌ போலவும்‌, கடற்கரை மணலைப்‌ போலவும்‌ பெருகவேபெருகப்பண்ணுவேன்‌”’ (ஆதி. 22:17).

“உன்னை ஆசீர்வதித்து, உன்‌ பேரைப்‌ பெருமைப்படுத்துவேன்‌; நீ ஆசீர்வாதமாய்‌ இருப்‌பாய்‌. உன்னை ஆசீர்வதிக்றெவெர்களை ஆசீர்வதிப்‌பேன்‌, உன்னைச்‌ சபிக்கிறவனைச்‌ சபிப்பேன்‌; பூமி
யிலுள்ள வம்சங்களெல்லாம்‌ உனக்குள்‌ ஆசீர்‌வதிக்கப்படும்‌” (ஆதி. 12:2,3).

“நீ வருகையிலும்‌ ஆசீர்வதிக்கப்பட்டிருப்‌ பாய்‌, நீ போகையிலும்‌ ஆசீர்வதிக்கப்பட்டிருப்‌பாய்‌” (உபா. 28:6).

நான்‌ அவர்களையும்‌ என்‌ மேட்டின்‌ சுற்றுப்‌ புறங்களையும்‌ ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப்‌ பெய்யப்பண்ணுவேன்‌; ஆசீர்வாதமான மழை பெய்யும்‌”: (எசேக்‌. 34:26).

நான்‌ வானத்தின்‌ பலகணிகளைத்‌ திறந்து இடங்கொள்ளாமற்‌ போகுமட்டும்‌ உங்கள்‌ மேல்‌ ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால என்னைச்‌ சோதித்துப்‌ பாருங்கள்‌’” (மல்‌. 3:10)

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.(சங்‌, 128:5,6).

“இப்போதும்‌ உமத அடியானின் வீடு என்றைக்கும்‌ உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு,அதை ஆசீர்வதித்தருளினீர்‌; கர்த்தராகிய தேவரீர்‌ அதை ஆசீர்வதித்தபடியினால்‌, அது என்றைக்கும்‌ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்‌”” (நாளா. 17:27).

“தேவரீர்‌ உமது ஜனத்தை இரட்சித்து , உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்‌, அவர்களைப்‌ போஷித்து, அவர்களை என்றென்றைக்கும்‌ உயர்த்தியருளும்‌”! (சங்‌. 28:9).

கர்த்தர்‌ நம்மை நினைத்திருக்கிறார்‌, அவர்‌ ஆசீர்வதிப்பார்‌; இஸ்ரவேல்‌ குடும்பத்த ஆசீர்வதிப்பார்‌, அவர்‌ ஆரோன்‌ குடும்பத்தாரை ஆசீர்‌வதிப்பராக (சங்‌. 115:12).

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்‌; அவர்‌ கிறிஸ்துவுக்குள்‌ உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும்‌ நம்மை ஆசீர்வதித்திருக்‌கிறார்‌”: (எபே. 1:3).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *