- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் ஆசீர்வதிக்கப்படுவான் சங்கீதம் 128:4 இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.. சங்கீதம் 115:13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும் சங்கீதம் 112:2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். நீதிமான் ஆசிர்வதிக்கப்படுவான் நீதிமொழிகள் 10:6 நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். நீதிமொழிகள் 3:33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். கருணைக்கண்ணன் ஆசிர்வதிக்கப்படுவான் நீதிமொழிகள் 22:9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். சங்கீதம் 37:26 அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வதிக்கப்படுவான் நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். தசம பாவங்களை ஆலயத்திற்கு கொண்டு வருவதால் ஆசிர்வாதம் மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம்…
பூமியை சுதந்தரிக்கும் படி ஆசீர்வதிக்கிறார் சங்கீதம் 37:22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். நித்திய ஆசீர்வாதங்களை கொடுக்கிறார் சங்கீதம் 21:6 அவரை நித்திய ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருளுகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். வீட்டையும் அவனுக்கு உண்டான யாவற்றையும் ஆசீர்வதிக்கிறார் 1 நாளாகமம் 13:14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 39:5 அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கைகளின் கிரியை ஆசீர்வதிக்கிறார் யோபு 1:10…
கடன் கொடுக்கும்படி ஆசிர்வதிப்பார் உபாகமம் 15:6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. பட்டணத்திலும் வெளியிலும் ஆசீர்வதிப்பார் உபாகமம் 28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். கர்ப்பகனி ஆடு மாடு ஆசீர்வதிக்கப்படும் உபாகமம் 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். வருகையிலும் போகையிலும் ஆசீர்வாதம் உபாகமம் 28:6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். களஞ்சியங்கள் ஆசீர்வதிக்கப்படும் உபாகமம் 28:8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். இயற்கை ஆசிர்வதிக்கப்படும் உபாகமம் 28:12 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே…
A study by PAS JOTHY RAJAN(9585758975) அழைப்புக்கு கீழ்ப்படிவதால் கிடைக்கும் ஆசீர்வாதம் ஆதி 12: 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். மனைவிக்கு கொடுககப்பட்ட ஆசீர்வாதம் ஆதியாகமம் 17:16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். ஜெபத்தினால் கிடைத்த ஆசிர்வாதம் ஆதியாகமம் 17:20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். வைக்கப்ட்ட சோதனையில் கீழ்படிந்து ஜெயித்ததால் கிடைத்த ஆசீர்வாதம் ஆதி 22: 16 நீ உன் புத்திரன் என்றும், உன்…
A Study by Pas JOTHY RAJAN(9585758975) கொலோசெயர் 2:3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. 1. தேவனை அறிந்து கொள்ள எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 2 பேதுரு 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 2 பேதுரு 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். 2. காலத்தை பிரயோஜனப்படுத்த / தேவ சித்தம் செய்ய எபே 5: 15 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று…
A Study by Pas JOTHY RAJAN(9585758975) ஏசாயா 3:8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. 1. பொய் நாவு நீதிமொழிகள் 6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, 2. சண்டை பண்ணும் நாவு சங்கீதம் 31:20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 3. பிணைக்கும் நாவு சங்கீதம் 50:19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. 4. புரட்டும் நாவு நீதிமொழிகள் 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். 5. புறங்கூறுகிற நாவு நீதிமொழிகள் 25:23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். 6. கத்தி – கபடு நாவு சங்கீதம்…
மேசியாவின் பாடுகளை பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் 49,50,53 ஆகிய அதிகாரங்களில் காணப்படுகிறது, அவைகளை பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவருமாய் இருந்தார். ஏசாயா 49: 7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார். விரும்பத்தக்க ரூபம் இல்லாத வரும், புறக்கணிக்கப்பட்டவரும் துக்கம் நிறைந்தவராகவும் காணப்பட்டார். ஏசாயா 1: 1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை…
1. ஊழியன் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் 2. ஊழியக்காரன் எப்படி இருக்கக்கூடாது 3. ஊழியத்தில் 4. ஜெயம் கொள்கிறவன் 5. பெருமைக்கான காரணங்கள் 6. மதுபானம் 7. யார் பாக்கியவான் 8. கர்த்தர் எனவகளில் பிரியமாயிருக்கிறார் 9. நாம் எவைகளில் பிரியமாய் இருக்க வேண்டும் 10. எவைகளை தியானிக்க வேண்டும் 11. எவைகளில் நிலைத்திருக்க வேண்டும் 12. சிறுமைப்பட்டவன் 13. கர்த்தரின் சிட்சை 14. எதற்கு யாருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 15. வேதத்தில் பரிசுத்தம் 16. இருதயம் 17. சுவிசேஷம் ஏன் அறிவிக்க வேண்டும் 18. இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுவிசேஷம் அறிவிக்க கற்று கொள்ளல் 19. சோதனை- சோதிக்கிறார் 20. நீதிமொழிகளில் சொல்லப்பட்ட ஸ்திரீகள் 21. கனி 22. மனந்திரும்புதலில் இருக்க வேண்டியவை 23. இரட்சிப்பு 24. கர்த்தரை தேடும் வழிகள் 25. வேதம் இந்த புத்தகத்தை அல்லது பிரசங்க குறிப்புக்களை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும் 9585758975 அல்லது…
இயேசுகிறிஸ்து சுவிசேஷ ஊழியத்திர்ற்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கின்றார். குறிப்பாக அவர் சமாரிய ஸ்திரீ உடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சுவிசேஷ ஊழியம் எப்படி செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம். 1. அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று , எளிதில் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். இயேசு மீன் பிடிக்கிறவர்களை பிடிக்க வேண்டும் என்று கலிலேயாக் கடலோரமாய் நடந்து போனார். அவர்கள் இடத்திற்கு கடந்து சென்றார். மாற்கு 1 : 17. 2. ஏதாவது பொதுவான காரியத்தை பேசி ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் தா என்று தண்ணீரை மையமாக கொண்டு தன் பேச்சை ஆரம்பிக்கிறார். யோவான் 4:7 -9 தண்ணீர் மேல் தன் சம்பாஷணைக்கு அஸ்திபாரம் போட்டார். 3. ஆர்வத்தை அனல் மூட்டி எழுப்ப வேண்டும்: இயேசு தண்ணிரைப் பற்றி பேசுவதிலிருந்து “ஜீவத்தண்ணீரைப்” பற்றி பேசத் தொடங்கினார். தண்ணீரிலிருந்து ஜீவத்தண்ணீருக்கு மெதுவாக சம்பாஷணையில் நகர்ந்தார். (வசனம் 10) 4. அவசரம் கூடாது…
1. அழியும் ஆத்துமாக்கள் மேல் கரிசனை வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நரகத்திற்கு போய்க்கொண்டிருக்கும் இந்த உலகில் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக அழியும் ஆத்துமாக்களையும் அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் கொடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு சுவிசேஷம் சொல்லப்படவேண்டும். 2. கிறிஸ்துவின் அன்பு நம்மில் ஊற்றப்பட்டுள்ளதால் 2கொரிந்தியர் 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். பவுல் தன் இனத்தாருக்காக தான் சபிக்கப்பட்டவனாக வேண்டும் என்று கூறுகிறார். ரோமர் 5:3. 3. இது தேவனுடைய கட்டளை ஆகும் மத் 28: 18-20அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல…