- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
Notes by Pastor JOTHY RAJAN(9585758975) 1. கர்த்தரிடத்தில் தயை பெறுகிறான் நீதிமொழிகள் 12:2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார். 2. ஞானம் , அறிவு இன்பம் அடைகிறான் பிரசங்கி 2:26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. 3. நன்மை பெறுகிறான் சங்கீதம் 125:4 கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். 4. பிள்ளைகளுக்கு சுதந்திரம் வைக்கிறான் நீதிமொழிகள் 13:22 நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 5. நல்லவர்கள் என சாட்சி பெற்றவர்கள். அப்போஸ்தலர் 10:22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய…
A bible Study By Pastor R. JOTHY RAJAN(9585758975) 1. பாவம் செய்கிறதால் சாபம் வருகிறது ஆதியாகமம் 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். Missing the mark – தேவன் செய்யாதே என்று சொன்னதை செய்தாலும் செய் என்று சொன்னதை செய்யாவிட்டாலும் அது பாவம் 2. நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாததால் சாபம் வருகிறது உபாகமம் 27:26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். உபா 28: 15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப்…
A Study by Pas JOTHY RAJAN 1. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் 1 சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். உபாகமம் 8:20 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள். யோசுவா 5:6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். 1 இராஜாக்கள் 20:36 அப்பொழுது…
சரித்திரத்தில் முதல் மனிதக் கடவுள் நிம்மிரோத். நிம்மராத்தின் காலத்துக்கு முன்பு வரை ஜனங்கள் ஒரே ஒரு தெய்வக் கொள்கை உடையவர்களாக யாவே என்கிற சிருஷ்டிகரை தொழுது வந்தனர். இவனைக் குறித்து வேதம் ஆதி 10: 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. அவனுடைய வேட்டை இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான் என்று சொல்லப்படுவதற்கான காரணம், அந்த காலத்து ஜனங்கள் மலைகளுக்கு சென்று ஒன்றான மெய் தெய்வத்தை வணங்கி பலியிட்டு திரும்பி கீழே வருவார்கள் அப்படி திரும்பி வருகிற ஜனங்களை இவன் வழிமறித்து கேள்விகளை கேட்பான். நீங்கள் தெய்வத்தை முகமுகமாய் பார்த்தீர்களா தெய்வத்தோடு பேசினீர்களா இல்லை யாவே தெய்வம் உங்களோடு பேசினாரா அவரை நீங்கள் தொட்டீர்களா அவர் உங்களை தொட்டாரா என்று பேசி அவர்களுடைய உள்ளங்களிலே ஐயங்களை எழும்ப பண்ணி குழப்பி விட்டு அவர் தெய்வம்…
ஆதி 2: 10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு. 13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர். ஏதேன் தோட்டத்திலிருந்து நான்கு ஆறுகள் பிறக்கிறதை பார்க்க முடிகிறது, பைசோன், கீகோன், இதெக்கேல் மற்றும் ஐபிராத்து . இதில் முதல் இரண்டு ஆறுகள் ஆகிய பைசோன், கீகோன் சரித்திரத்தின் படி எங்கு அமைந்துள்ளது என்பதை அறிய முடியவில்லை ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது ஆறுகளாகிய இதெக்கேல் மற்றும்…
தலைப்புக்கள் இந்த புத்தகத்தை அல்லது பிரசங்க குறிப்புக்களை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும் 9585758975 அல்லது 7845176309.கால் செய்தோ அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம் .
ஆரோக்கியம் உண்டாக. எரேமியா 33:6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். 1. சரீர சுக பெலன் ஆரோக்கியம் உண்டாக. 2. சிந்தனை மண்டல ஆரோக்கியம் உண்டாக 3. மனநிலை ஆரோக்கியம் உண்டாக சமாதானம் உண்டாக சங்கீதம் 40:16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. தேவைகள் சந்திக்கப்பட உபாகமம் 28:5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். பிரயாணங்களில் பாதுகாப்பிற்க்காக சங்கீதம் 121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். வேலையில் ஆசீர்வாதத்துக்காக உபாக 28:8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். தனிப்பட்ட வாழ்வில் தேவ சித்தம் நிறைவேற…
Sermon By Pastor JOTHY RAJAN(9585758975) இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சில காரியங்களுக்காக காக்க்குக்கிறார்கள். நம்மில் சிலர் எப்பொழுது கூட்டம் முடியும் வீடு சென்று கறிசோறு சாப்பிட முடியும் என்றும் , விவசாயிகள் சிலர் மழை எப்போ நிற்கும் / பெய்யும் என்றும் ,சிலர் கிறிஸ்மஸ் பண்டிகை எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர் . 1. பூமியில் ஆசீர்வதிக்கப்பட காத்திருக்க வேண்டும் சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். சங்கீதம் 37:9பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இரண்டு நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது 1.காத்திருந்து, 2.அவருடைய வழியைக் கைக்கொள் அப்பொழுது ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களை உயர்த்துவார் . 2.மரண கட்டுகள் விலக காத்திருக்க வேண்டும் சங்கீதம் 33:18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்…
“நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவேபெருகப்பண்ணுவேன்”’ (ஆதி. 22:17). “உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்றெவெர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:2,3). “நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப் பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா. 28:6). நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப் புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்”: (எசேக். 34:26). நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால என்னைச் சோதித்துப் பாருங்கள்’” (மல். 3:10) கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.(சங், 128:5,6). “இப்போதும் உமத அடியானின் வீடு என்றைக்கும்…
A Study By Pastor Jothy Rajan(9585758975) நீதிமொழிகள் 18:9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். நீதிமொழிகள் 19:15 சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான் நீதிமொழிகள் 10:4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதிமொழிகள் 17:2 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.