Author: Pastor Jothy Rajan

BY PASTOR JOTHY RAjAN (9585758975) எப்படி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் ? மனம் திரும்பி பாவங்களை அறிக்கையிட்ட பிறகு மத் 3 5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், 6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். விசுவாசத்தோடு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்பது தேவ கட்டளை ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்பது தேவ கட்டளை மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா…

Read More

BY PASTOR JOTHY RAjAN (9585758975) மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும் 1 பேதுரு 5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். 4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். உபதேசத்திற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும் ரோமர் 6:17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும் யாத்திராகமம் 25:2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. யாத்திராகமம் 35:22 மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக்…

Read More

ஏசாயா 3:8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. பொய் நாவு நீதிமொழிகள் 6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, சன்டை பன்னும் நாவு சங்கீதம் 31:20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். பினைக்கும் நாவு சங்கீதம் 50:19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. புரட்டும் நாவு  நீதிமொழிகள் 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். புறங்கூறுகிற நாவு நீதிமொழிகள் 25:23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். கத்தி – கபடு நாவு சங்கீதம் 52:2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.…

Read More

1) சாத்தானால் 2 கொரி 2:11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. வெளி 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 2) ஆகாத சம்பாஷனையால் 1 கொரி 15:33 மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 3) சகோதரனால் ஏரே 9:4 நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். 4) தீர்க்கதரிசனத்தினால் ஏரே 23:13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள். 5) சிநேகிதர்களால்  புலம் 1:19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையிலே நகரத்தில்…

Read More

எரிச்சலின் ஆவி எண்ணாகமம் 5:14 எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி நியாயாதிபதிகள் 9:23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார். 24 யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம்பண்ணினார்கள். பொல்லாத ஆவி 1 சாமுவேல் 16:14 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. பொய்யின் ஆவி 1 இராஜாக்கள் 22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது…

Read More

ஊழிய அர்ப்பணிப்பும் பெற்ற வாக்குத்தத்தமும் மேரி கிரேபியெல் (Mary Graybiel) என்பவர், 1882ஆம் ஆண்டு சுவிசேஷத்தை அறிவிக்க கடல் கடந்து பயணம் செய்த நான்கு பெண்மணிகளின் ஒருவர். மேரி தன் சிறுவயதில், ஆன் ஹாஸ்ஸெல்ட்டைன் ஜட்சன் (Ann Hasseltine Judson) என்ற தேவ ஊழியரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்ததும், ஊழியத்தின் மீது வாஞ்சை கொண்டார். மேரி வயதில் வளர வளர, தான் மிஷனரி ஆக வேண்டும் என்ற வாஞ்சையும் தீவிரமடைந்தது. ஒரு நாள், பஃப்பலோ என்னும் ஊரில் ஒரு ஞாயிறு பள்ளி நிறுவனத்தில் பங்கேற்றார். அப்பொழுது, இந்தியாவில் மிஷனரி பணிக்கென பெண்களை விண்ணப்பிக்க கோரி, “கிறிஸ்டியன் விமன்ஸ் போர்ட் ஆஃப் மிஷன்ஸ்” (கிறிஸ்தவ மகளிர் ஊழிய வாரியம்) வெளியிட்ட ஓர் சுற்றறிக்கையை கண்டெடுத்தார். அந்த ஊழிய வாய்ப்பை குறித்து ஜெபித்த பிறகு, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்ற வேதவசனத்தின் மூலம் வழிநடத்துதலை பெற்றார். தேவ சித்தம் தன் வாழ்வில்…

Read More

தாழ்த்தி ஜெபியுங்கள் 2 நாளா 7 : 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். நொறுங்குண்டு ஜெபியுங்கள்  ஏசாயா 66 : 2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். மன உறுதியோடு ஜெபியுங்கள் எபேசி 6 : 18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.…

Read More

வசனத்தை கைக்கொள்வதால் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது. 9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன. 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. நீதிமொழிகள் 13:13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். கர்த்தரை கனம் பண்ணுவதினால் வரும் பலன் கர்த்தரை கனம் பண்ணுவதினால் வரும் பலன் நீதிமொழிகள் 3:9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். இயேசுவின் நாமத்தால்…

Read More

வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.  வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால் நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவனுக்கு ஏசாயா 26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் கற்பனைகளின் படி நடக்கிறவனுக்கு ஏசாயா 48:18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். ஆவியின் சிந்தை உடையவனுக்கு ரோமர் 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ஞானம் உடையவனுக்கு யாக்கோபு 3:17பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

Read More

கர்த்தரின்‌ நாமங்கள்‌ “நம்முடைய சகாயம்‌ வானத்தையும்‌ பூமியையும்‌ உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில்‌ உள்ளது. சங்கீதம்‌ 124:8. 1. ஏல்‌ அல்லது ஏலோஹீம்‌ “தேவன்‌ சர்வத்தையும்‌ ஆண்டு நடத்தும்‌ வல்லமையுள்ளவர்‌” என்பது இதன்‌ கருத்தாகும்‌.வேதாகமத்தின்‌ முதல்‌ வசனத்திலேயே இந்த நாமம்‌ சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில்‌ மட்டும்‌ 2500 தடவைகள்‌ இப்பெயர்‌ காணப்படுகிறது. 2. யாவே அல்லது யெகோவா “இருக்கிறவராய்‌ இருக்கின்றேன்‌” (யாத்‌ 3:14) என்பது இதன்‌ கருத்தாகும்‌. இந்நாமத்தை யூதர்கள்‌ உச்சரிக்கத்‌ துணியவில்லை. அப்பயத்தின்‌ காரணமாக உடன்படிக்கைக்குரிய இப்பெயரை உச்சரிப்பது எவ்வாறு என்று அறியாதிருந்தார்கள்‌. “யாவே” சரியான பூர்வக உச்சரிப்பு என்பது பல ஆராய்ச்சியாளருடைய அபிப்பிராயமாகும்‌. இந்த பெயர்‌ கொண்ட தேவன்‌ வாக்குமாறாதவர்‌, தாம்‌ செய்த உடன்படிக்கையை மீறாதவர்‌. சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில்‌ “யெகோவா” என்ற பெயரை பயன்படுத்த முயன்றும்‌ அது சாதாரண மக்களுக்கு விளங்காத காரணத்தால்‌ “LORD” என்று ஆங்கிலத்திலும்‌, தமிழில்‌ தடித்த எழுத்தில்‌ கர்த்தர்‌ என்றும்‌ எழுதியிருக்கிறது. 3. அடோனாய்‌…

Read More