பரிசுத்தமான பிதாவே | Parisuthamana Pithave Song lyrics | natha ne mathi enikku Song lyrics Tamil

1. பரிசுத்தமான பிதாவே
கருணையின் ஆழ்கடலே
கிருபையின் ஊற்று நீரே
ஆறுதல் அளிப்பவரே

நாதா நீர் போதும் எனக்கு – உம்
கிருபை போதும் எனக்கு
என் ஜீவ யாத்திரையில்
கிருபை போதும் எனக்கு

2. ஜீவிய யாத்திரையில்
பாரங்கள் அழுத்தும் போது
சோராமல் ஓடிடவே
கிருபை போதும் எனக்கு – நாதா

3. உலகத்தை ஜெயித்திடவே
பாவத்தை மேற்கொள்ளவே
சத்துருவை எதிர்த்திடவே
கிருபை போதும் எனக்கு – நாதா

4. உம்மையை பின்பற்றவே
ஊழியம் செய்திடவே
ஜெயமாய் வாழ்ந்திடவே
கிருபை போதும் எனக்கு – நாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *