A Study By Pastor Jothy Rajan (9585758975)
ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் தேவன் தம்முடைய வார்த்தையாலே பூமியில் உள்ள யாவையும் சிருஷ்டிக்கிறதை பார்க்க முடிகிறது . ஆகவே தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? எதற்கு ? என்று தேவ வார்த்தையின் மகத்துவத்தை தியானிக்கும் பொது கிடைத்த பிரசங்க குறிப்பு
ஜீவன் உள்ளது
எபி 4: 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
- ஜீவன் உள்ளது – இன்றைக்கும் வாழுகிற ஒன்று (இது சரித்திர புத்தகம் அல்ல ஜீவன் உள்ள தேவனுடைய வார்த்தை)
மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
வெறுமையாய் திரும்பாது
ஏசா 55 : 11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
- வார்த்தையால் சுகமடைந்து நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன்
மத்தேயு 8:8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
- வாக்குத்தத்தம்
சங்கீதம் 119:49
நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். 50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.51 அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
- யோசேப்பின் வாழ்வு
தீபமும் வெளிச்சமாக இருக்கிறது (ஞானத்தின் ஊற்று )
சங் 119 : 105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
வசனம் தனக்குள் இல்லாதவன் இருட்டில் இருக்கிறான். இருட்டில் இருக்கிற எவனும் பிறருக்கு வழிகாட்ட முடியாது
ஆவிக்குரிய வாழ்வில் வளர செய்கிறது
மத் 4 : 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே..
1 பேதுரு 2:3
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்







